புள்ளம்பாடியில் பாதை தொடர்பான மோதலில் 14 பேர் மீது வழக்கு !

பாதை தொடர்பாக மோதிக்கொண்ட 14 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர் புள்ளம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பழனிச்சாமி மற்றும் ராமராஜ் . இவர்கள் இருவரும் அருகருகே வீட்டில் வசித்து வருகின்றனர்.
இவர்களுக்கு இடையே பொதுவான பாதை தகராறு தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் பழனிச்சாமி இருவருக்கும் பொதுவான பாதையை மூடியதாக கூறப்படுகிறது .

இது குறித்து ராமராஜ் தரப்பினர் அவரிடம் கேட்கச் சென்றபோது வாய் வார்த்தை கைகலப்பாக மாறியதில் இரு தரப்பினரும் மோதிக்கொண்டனர். இதில் பழனிச்சாமியின் மனைவி காலீஸ்வரி மற்றும் ராமராஜ் தரப்பைச் சேர்ந்த சீனிவாசன் ஆகிய இருவரும் காயமடைந்து லால்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக இருதரப்பினரும் அளித்த புகாரின் பேரில் கல்லக்குடி போலீசார் 14 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
நம்ம திருச்சி செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/2fzPX6Xk74u1Jvo2IcaWSe
