
கணவர் திட்டியதால் மனம்முடைந்து மனைவி தற்கொலை
திருச்சி மாவட்டம் லால்குடி தாண்டாங்கோரை பகுதியைச் சேர்ந்தவர் சண்முகப்பிரியா (வயது 27 ). கடந்த 25 ஆம் தேதி அன்று சரியாக உணவு சமைக்க வில்லை என கணவர் இவரை திட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் மனம் உடைந்து காணப்பட்ட சண்முகப்பிரியா வீட்டிலிருந்த எலி விஷத்தை எடுத்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார் . இதை அடுத்து அவரது உறவினர்கள் அவரை திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கு தொடர் சிகிச்சையில் இருந்த சண்முகப்பிரியா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் .லால்குடி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
