
முதியவர் மாயம்! போலீசார் விசாரணை
திருச்சி ஏர்போர்ட் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ஜோசப்(72) வேலைக்கு செல்வதாக வீட்டில் கூறி சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

ஜோசப்பை அவரது மனைவி மற்றும் உறவினர்கள் தேடிவந்த நிலையில் அவர் கிடைக்கவில்லை.
இந்நிலையில், இது குறித்து அவரது மனைவி செல்வி ஏர்போர்ட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் மலைச்சாமி வழக்குப்பதிந்து ஜோசப்பை தேடி வருகின்றனர்
