
திருச்சியில் பள்ளி சென்ற மாணவன் மாயம்!
திருச்சி கே. கே. நகர் ஐயப்பன் நகர், திலகர் தெருவை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி மகன் சேதுபதி. (16). 11 ம் வகுப்பு மாணவர்.

சம்பவத்தன்று வழக்கம்போல் பள்ளியில் இருந்து வீடு திரும்பிய சேதுபதி,அருகில் உள்ள கடைக்கு சென்று வருகிறேன் என்று கூறி சென்றார். நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.
இது குறித்து அவரது தாத்தா ராஜசேகர் அளித்த புகாரின்பேரில்
கே.கே.நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
