
கை கலப்பு: கைது
திருச்சி,டிச.6-

திருச்சி பொன்மலை முன்னாள் ராணுவ வீரர் காலனியை சேர்ந்தவர் வினோத்குமார் .( 37) கீழகல்கண்டர்கோட்டை காரைகுளம் பகுதியை சேர்ந்தவர் சத்யராஜ் இருவரும் நண்பர்கள். பொன்மலை டாஸ்மார்க்கில் மது அருந்தி கொண்டிருந்தனர் அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் சத்யராஜ், வினோத்குமாரை தாக்கினார்.
பலத்த காயமடைந்த வினோத் குமார், உடனடியாக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இது குறித்த புகாரின் பேரில் சத்யராஜ் மீது பொன்மலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
