
திமுக திருச்சி தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டத்திற்கு அமைச்சர் அழைப்பு!
தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் ,பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி, வெளியிட்டுள்ள அறிக்கையில்,

திருச்சி தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நாளை (07.12.2022) மாலை 5.30 மணிக்கு திருச்சி தெற்கு மாவட்ட அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு விழா, கட்சி ஆக்க பணிகள் சம்பந்தமாகவும் ஆலோசனை நடைபெற உள்ளது.
இந்த நிகழ்வில் மாநில, மாவட்ட, மாநகர நிர்வாகிகள், மாநகர, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் உள்ளாட்சி சேர்மன்கள் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
