
பயிர் காப்பீடு திட்டத்தை சீரமைக்க மத்திய அரசுக்கு வேண்டுகோள்!
பாரதிய கிசான் சங்க அகில இந்திய துணைத் தலைவர் பெருமாள்,
திருச்சியில் அளித்த பேட்டி: மத்திய பா. ஜ. க அரசு விவசாய விளைப்பொருள்களுக்கு லாபகரமான விலை வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு உர மானியம் வழங்க வேண்டும். உழவர் நிதி, பிரதமர் கிசான் நிதி உயர்த்தி வழங்க வேண்டும்.

பயிர் காப்பீட்டு திட்டம் விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில் மறு சீரமைப்பு செய்யப்பட வேண்டும். மரபணு மாற்றப்பட்ட விதைகளை இந்தியாவிற்குள் அனுமதிக்க கூடாது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 19 ம் தேதி, டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தை வெளிப்படுத்தும் வகையில் ஆர்பாட்டம் செய்ய இருக்கிறோம்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் நாடு முழுவதிலிருந்து சுமார் 5 லட்சம் விவசாயிகள் பங்கேற்க உள்ளனர். மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பாராளுமன்ற குளிர்கால கூட்ட தொடரை ஒட்டி இந்த போராட்டம் நடத்த உள்ளோம். தென்னிந்தியாவிலிருந்து சுமார் 10,000 விவசாயிகள் பங்கேற்க உள்ளனர்.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்க உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
