
மிஸ் இந்தியா போட்டியில் திருச்சி திருநங்கை!

திருச்சி கல்லுக்குழியை சேர்ந்தவர் ரியானா சூரி(26) .
திருநங்கை . எம்.எஸ்.சி முடித்த ரியானா, கடந்த 2019-ம் ஆண்டு முதல் மாடலிங் துறையில் கவனம் செலுத்தி வருகிறார்.
கடந்த ஏப்ரல் மாதம் விழுப்புரத்தில் நடைபெற்ற மாடலிங் போட்டியில் கலந்து கொண்ட ரியானா, இந்த மாதம் புதுடெல்லியில் நடைபெற இருக்கும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கான மிஸ் இந்தியா போட்டியில் கலந்து கொள்ள தேர்வாகியுள்ளார்.
