
குழந்தை சாவு
திருச்சி,டிச.10-
மூச்சுத் திணறலால் 4 வயது ஆண் குழந்தை உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

துறையூர் முத்தையா காலனியை சேர்ந்தவர் சௌந்தர்ராஜன் .
இவரது நான்கு வயது ஆண் குழந்தைக்கு திடீரென நேற்று மூச்சு திணறல் ஏற்பட்டு துறையூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக குழந்தை திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதை அடுத்து குழந்தையின் உடல் திருச்சி அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வுக்காக வைக்கப்பட்டது.
இது குறித்த புகாரின் பேரில் துறையூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
