
வழிப்பறி :3 பேர் கைது
திருச்சி தில்லைநகர் மூவேந்தர் நகரை சேர்ந்தவர் பெரியசாமி(66).

புத்தூர் வண்ணாரப்பேட்டை பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது,
இருசக்கர வாகனத்தில் வந்த 4பேர் அவரை வழிமறித்து தாக்கி, செல்போனை பறித்து சென்றனர்.
புகாரின் பேரில் அரசு மருத்துவமனை போலீசார் வழக்கு பதிவு செய்து பாலக்கரை காஜாபேட்டியை சேர்ந்த கார்த்திக் என்ற கட்டையன் (28), ஆரிஃப் கான்(19), நியமத்துல்லாஹ்(14) ஆகியோரை கைது செய்தனர். மேலும் காஜாபேட்டை பகுதியை சேர்ந்த சம்பத்ராஜ்(32) என்பவரை தேடி வருகின்றனர்.
