
திருச்சியில் லாட்டரி விற்ற 7 பேர் கைது!
திருச்சி மாநகரில் லாட்டரி புழக்கம் இருப்பதாக மாநகர காவல் ஆணையருக்கு புகார்கள் வந்தன. மாநகரில் அனைத்து பகுதிகளிலும் அந்தந்த காவல் ஆய்வாளர் தலைமையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

இதில் பாலக்கரை மெயின் ரோட்டில் உள்ள மேம்பாலம் அருகே லாட்டரி விற்ற புதுக்கோட்டையை சேர்ந்த சூசை என்கிற அய்யனார் (40), இளையான்குடியை சேர்ந்த ஜெகன் (22), விஷ்ணு (23), பள்ளிபாளையத்தை சேர்ந்த அருண் பிரசாத் (24), கர்நாடகாவை சேர்ந்த ஆரோக்கியசாமி (20) திருச்சி பிள்ளைமாநகரை சேர்ந்த மரியமெர்குலிஸ் (47) மற்றும் ராமநாதபுரத்தை சேர்ந்த துரைமுருகன் (37) ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடமிருந்து 8 செல்போன்கள், ரூ.20 ஆயிரம், கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
