
கை குழந்தையுடன் இளம்பெண் மாயம்!
திருச்சி எடமலைப்பட்டிபுதூர் ஆர்.எம்.எஸ்.காலனி நான்காவது தெருவை சேர்ந்தவர் ரெங்கசாமி மனைவி தேன்மொழி ( 21)

இவர்களுக்கு விநாயகராஜ் ( 2) என்ற மகன் உள்ளான். சம்பவத்தன்று தேன்மொழி தனது இரண்டு வயது மகனுடன் தங்கை வீட்டிற்கு சென்று வருகிறேன் என்று கூறி சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
இது தொடர்பாக பல இடங்களில் தேடி பார்த்தும் எங்கும் அவர் கிடைக்கவில்லை. இது குறித்து ரெங்கசாமி எடமலைப்பட்டி புதூர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன தேன்மொழி மற்றும் அவரது இரண்டு வயது மகன் விநாயகராஜ் ஆகியோரை தேடி வருகின்றனர்.
