
தேசிய பசுமை படை மாணவ மாணவிகள் சார்பில் காற்று மாசுபாடு விழிப்புணர்வு பேரணி
தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் துறை, திருச்சி மாநகராட்சி, தேசிய மாசு கட்டுப்பாட்டு வாரியம், பள்ளிக்கல்வித்துறை, தேசிய பசுமை படை மாணவ மாணவிகள் சார்பில் காற்று மாசுபாடு விழிப்புணர்வு பேரணி தேசிய கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.

மாநகராட்சி ஆணையர் வைத்தியநாதன் தலைமை வகித்தார்.
முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி முன்னிலை வகித்து பேரணியை தொடங்கி வைத்தார்.
மாவட்ட சுற்றுச்சூழல் அதிகாரி குணசீலன், மாவட்ட கல்வி அலுவலர் செல்வம், முதுகலை ஆங்கில ஆசிரியர் ஜேசுராஜ் திரவியம், உதவி வன பாதுகாவலர் சம்பத்குமார், பள்ளி தலைமை ஆசிரியர் பாலசுப்பிரமணியன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பாரூக், பசுமை படை ஒருங்கிணைப்பாளர் கரோ கோரி, சகாயராஜ், பட்டதாரி ஆசிரியர் அந்தோணி லூயிஸ், மாநகராட்சி நிர்வாக பொறியாளர் குமரேசன், கோட்டை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கந்தசாமி, இடைநிலை பொறியாளர் ரவி, மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் மாணவ மாணவிகள் மற்றும் தேசிய பசுமை படை பொறுப்பு ஆசிரியர்கள் மற்றும் காவல் துறை போக்குவரத்து ஆய்வாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் திரளாக பங்கேற்று காற்று மாசுபாட்டால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்.
