
திருச்சி மாநகர போலீசார் அதிரடி நடவடிக்கை சிக்கிய ரவுடிகள்
திருச்சி மாநகர போலீசார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் 13 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி ஶ்ரீரங்கம் மேலூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் அஜித்குமார் (26). சம்பவத்தன்று இவர் அந்த பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்பொழுது மூலத்தோப்பு பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவர் கத்திய காட்டி மிரட்டி அவரிடம் இருந்து ரூபாய் 500 பணத்தை பறித்துக கொண்டு ஓடி விட்டார். இது குறித்து அஜித்குமார் கொடுத்த புகாரின் பேரில் திருவரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து ரமேஷை கைது செய்தனர்.

திருச்சி ஜெயில் பேட்டை பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 22) இவர் தட்டு ரிக்ஷா தொழிலாளி. சம்பவத்தன்று இவர் காந்தி மார்க்கெட் பழைய மீன் மார்க்கெட் அருகில் நின்று கொண்டிருக்கும் பொழுது அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி திருச்சி வரகனேரியை சேர்ந்த ஜாக்கிஜான் (29) மாடசாமி (22) ஆகிய 2 பேர் கத்தியை காட்டி மிரட்டி ரூபாய் ஆயிரம் ரூபாய் பணத்தை பறித்து கொண்டு ஓடினர். இந்த சம்பவம் குறித்து காந்தி மார்க்கெட் போலீசார் வழக்குப் பதிவு செய்து இரண்டு பேரையும் கைது செய்தனர்.
திருச்சி பாலக்கரை பகுதியில் கத்தி காட்டி மிரட்டி பணம் பறித்தாக நவநீதகிருஷ்ணன் (27 )ஜஸ்டின் கிறிஸ்தவராஜ் ( 24) விமல்ராஜ் (24) ஆசாத் முகமது 21)ஆகிய நான்கு பேரை பாலக்கரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி பொன்மலைப்பட்டி மெயின் ரோட்டில் மலையடி வார பகுதியில் தங்கமணி (35) என்பவர் கத்தியை காட்டி மிரட்டி ரூபாய் ஆயிரம் பணம் பறித்தாக பொன்மலை போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
திருச்சி சிந்தாமணி பகுதியில் விக்னேஸ்வரன் 19) திருச்சி தென்னூர் பகுதியை சேர்ந்த குருமூர்த்தி (20) உறையூர் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் தனபால் (26) நவீன் குமார் (19) ஆகிய இரண்டு பேரையும், திருச்சி அரசு மருத்துவமனை போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் பாண்டி ( 32) என்ற வாலிபரையும் போலீசார் கத்தியை காட்டி மிரட்டி பணத்தை பறித்ததாக கைது செய்தனர். ஆக மொத்தம் திருச்சியில் ஒரே நாளில் 13 பேரை போலீசார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
