
பஸ் கவிழ்ந்து விபத்து ஒருவர் பலி!
பெங்களூருவில் இருந்து திருச்சி வந்த அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்து விபத்தில் சிக்கியதில் ஒருவர் பலியானார்.

பெங்களூருவில் இருந்து அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்து 49 பயணிகளுடன் திருச்சி வந்தது. தேசிய நெடுஞ்சாலையில் வளைவில் திரும்ப முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்த அரசு பஸ் வாத்தலை அருகே கவிழ்ந்தது. விபத்தில் 21 பேர் காயமடைந்தனர்.
இதில் ஓசூர் அவளப்பள்ளியை சேர்ந்த ஸ்டீபன் அய்யாதுரை பாண்டியன் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வாத்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
