
மும்பை போலீஸ் தேடிய நபர்… திருச்சியில் சிக்கினார்
மும்பை போலீசால் தேடப்படும் வரும் நபர் திருச்சி விமான நிலையத்தில் சிக்கினார்

திருச்சி விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு இண்டிகோ விமானம் இரவு 7 மணி அளவில் புறப்பட தயாராக இருந்தது. முன்னதாக விமான பயணிகளை வான்நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் திருவாரூர் மாவட்டம் விஜயபுரம் பகுதியை சேர்ந்த ஹாஜா (வயது 42) என்பவர் மீது மும்பை போலீசில் ஒரு வழக்கு இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவரை ஏர்போர்ட் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இது குறித்த தகவல் மும்பை போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது.
