
வைகுண்ட ஏகாதசி ஜனவரி 2 லீவு!
திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு (02.01.2023) திங்கள் கிழமை உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் இது பொருந்தும். ஆயினும் பள்ளி மற்றும் கல்லூரி தேர்வுகள் நடைபெறுவதில் இந்த விடுமுறை பொருந்தாது.
இவ்விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 07.01.2023 சனிக்கிழமை அன்று வேலை நாள் என அறிவிக்கப்படுகிறது .
