
உரிமம் பெறாத மரக்கன்றுகள் விற்றால் நடவடிக்கை துணை இயக்குநர் எச்சரிக்கை!
உரிமம் பெறாமல் பழ, மரக்கன்றுகள் மற்றும் காய்கறி நாற்றுகள் விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று விதை ஆய்வு துணை இயக்குனர் கோவிந்தராசு எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு : திருச்சி மாவட்டத்தில் அரசு அங்கீகாரம் பெற்ற பழ மரக்கன்றுகள்
மற்றும் காய்கறி நாற்றுகள் விற் பனை செய்யும் நர்சரிகள் 12 இயங்கி வருகின்றன. இவற்றில் மட்டுமே விவசாயிகள் முந்திரி, மா, பலா, நெல்லி, கொய்யா, சப்போட்டா, தென்னங்கன்றுகள் மற்றும் தக்காளி, கத்தரிக்காய், மிளகாய் நாற்றுகள் வாங்க வேண்டும்.
காய்கறி நாற்றுகள் மற்றும் பழ மரக்கன்றுகளை விற்பனை செய்யும்போது ரசீது வழங்க வேண்டும். கன்றுகள் இருப்பு விவரங்களை பதிவேட்டில் பதிவு செய்து முறையாக பராமரிக்க வேண்டும். உரிமம் பெறாமல் பழ மரக்கன்றுகள், நாற்றுகள் விற்பனை செய்தால் விதை கட்டுப்பாடு ஆணை படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார் .
