
திருச்சி அருகே தீவிபத்தில் சிக்கி இளம் பெண் பலியான சோகம்!
மணப்பாறையை அடுத்த பாலப்பட்டியை சேர்ந்தவர் குஞ்சம்மாள் ( 24). இவர் கடந்த 30 ம் தேதி வீட்டில் சமையல் செய்து கொண்டு இருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக அவரது உடலில் தீப்பிடித்தது.

தீக்காயம் அடைந்த அவர் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் அவர் சிகிச்சை பலன் இன்றி இறந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் வையம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
