
ரோந்து போலீசாருக்கு ஆலோசனை வழங்கிய கமிஷனர்
திருச்சி மாநகர ரோந்து போலீசாருக்கு ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சி மாநகர ஆயுதப்படை வளாகத்தில் நடந்தது.
மாநகர கமிஷனர் கார்த்திகேயன் தலைமை வைத்து பேசுகையில் ,ரோந்து போலீசார் தாங்கள் செல்லும் பகுதியில் உள்ள பொது மக்களிடம் நன்கு பழக வேண்டும். பொதுமக்களுக்கும், காவல்துறைக்கும் இணைப்பு பாலமாக இருக்க வேண்டும்.

அப்போதுதான் பொதுமக்கள் உங்களிடம் பிரச்னைகளை
தெரிவிப்பார்கள் என்றார்.
போலீஸ் துணை கமிஷனர்கள் அன்பு, சுரேஷ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.முன்னதாக ரோந்து போலீசார் வாகனங்களை மாநகர கமிஷனர் தொடங்கி வைத்தார்.
