
பைக் மாயம்

திருச்சி உறையூர் சுண்ணாம்புக் கார தெருவை சேர்ந்தவர் பிரியா (29).இவர் சம்பவத் தன்று மேலசிந்தாமணி ராம மூர்த்தி நகர் பகுதியில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சென்றார். சிறிதுநேரத்தில் அங்கு வந்து பார்த்தபோது, வாகனத்தை காணாததால் அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து பிரியா அளித்த புகாரின்பேரில் கோட்டை குற்றப் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
