
கடையில் திருட்டு கட்டட உரிமையாளர் மீதே புகார்
திருச்சி பாலக்கரை சங்கிலி யாண்டபுரம் மெயின்ரோட்டில் மளிகை கடை நடத்தி வருபவர் தர்மராஜ் (76).இவரது கடையின் பின்பக்க கதவின் பூட்டை உடைத்த சிலர் அங்கிருந்த பொருட்களை திருடி சென்றனர்.இதுகுறித்து பாலக்கரை போலீசில் தர்மராஜ் புகார் தெரிவித்தார்.

அந்த புகாரில்கடையின் பின்பகுதியை உடைத்து உள்ளே புகுந்து கடையில் இருந்த ரூ. 5 லட்சம் மதிப்பிலான மளிகை பொருட்கள் மற்றும் ரூ. 50 ஆயிரத்தை கட்டிட உரிமையாளர்களான சகிலாபேகம் (65), ஆரிப்கான் (70), அம்ஜத்கான் (40) ஆகி யோர் திருடி சென்றதாக கூறி இருந்தார்.
புகாரின்பேரில், பாலக்கரை போலீசார் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
