நேர பிரச்சினை தொடர்பாக அரசு பஸ் ஓட்டுனரை தாக்கிய தனியார் பஸ் ஊழியர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

நேர பிரச்சினை தொடர்பாக அரசு பஸ் ஓட்டுனரை தாக்கிய தனியார் பஸ் ஊழியர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே அளவாய் பட்டி பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (48 ).இவர் பள்ளப்பட்டி பணிமனையைச் சேர்ந்த திருச்சி சேலம் பேருந்தில் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார் அதே பேருந்தில் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆனந்த் என்பவர் நடத்துனராக பணிபுரிந்து வருகிறார் இவர்களை முசிறி கைகாட்டியில் தனியார் பேருந்து டிரைவர் ரவி மற்றும் நடத்துனர் காந்தி ஆகியோர் நேர பிரச்னை காரணமாக தகராறு செய்து தாக்கினர்.

இதில் காயம் அடைந்த அரசு பேருந்து டிரைவர் முருகன் நடத்துனர் ஆனந்த் ஆகிய இருவரும் நாமக்கல் அரசு மருத்துவமனையில்
புற நோயாளிகளாக சிகிச்சை பெற்றனர்.
புகாரின் பேரில் தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மீது முசிறி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
