
ஸ்ரீரங்கம் கோவிலில் வைகுண்ட ஏகாதேசி விழா முன்னிட்டு அமைச்சர் ஆய்வு.
இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபுதிருச்சி மாவட்டம்,ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதேசி திருவிழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை இன்று (24.12.2022) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, ஓதுவார் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 2 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார், ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் எம். பழனியாண்டி,
இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை திருச்சி மண்டல இணை ஆணையர் செல்வராஜ்,இணை ஆணையர்கள் மாரிமுத்து, சுதர்சன், கல்யாணி, காவல் துணை ஆணையர் வி.அன்பு, உதவி ஆணையர் நிவேதா லட்சுமி, மாமன்ற உறுப்பினர்கள், இந்து சமயம் மற்றும் அறநிலைத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடன் இருந்தனர்
