
திருச்சி மாநகரில் நாளை 22ந்தேதி குடிநீர் கட் பகுதிகள்!
திருச்சி மாநகராட்சி பராமரிப்பின் கீழ் இயங்கி வரும் பொது தரை மட்ட கிணறு நீர் உந்து நிலையத்திலிருந்து உந்தப்படும் பிரதான குழாயில் திருச்சி சென்னை மெயின்ரோடு பால்பண்னை அருகில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதை மராமத்து செய்யும் பணி இன்று (21.01.2023) நடைபெறுகிறது.

ஆகையால், தேவதானம், விறகுபேட்டை புதியது, கல்லுக்குழி புதியது, கல்லுக்குழி பழையது, அரியமங்கலம் புதியது, ஜெகநாதப்புரம் புதியது, ஜெகநாதப்புரம் பழையது, தெற்கு உக்கடை, சங்கிலியாண்டபுரம் பழையது, மகாலட்சுமி நகர் ஆகிய 11 மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டிகள் மூலம் வழங்கப்படும் பகுதிகளுக்கு (22.01.2023) குடிநீர் விநியோகம் இருக்காது.
நாளை மறுநாள் 23.01.2023 அன்று வழக்கம் போல் குடிநீர் விநியோகம் இருக்கும். இதனால் பொதுமக்கள் குடிநீரை சேமித்து சிக்கனமாக பயன்படுத்தி மாநகராட்சியுடன் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இத்தகவலை திருச்சி மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
