
திருச்சியில் அடையாளம் தெரியாத நபர் சுருண்டு விழுந்து பலி! உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை!
திருச்சி காந்தி மார்க்கெட் பால்பண்ணை பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகாமையில் சாலையில் நடந்த சென்ற (32) வயது மதிக்கத்தக்க அந்த வாலிபர் திடீரென மயங்கி விழுந்தார்.

உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். இருந்தபோதிலும் அந்த வாலிபர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.
அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்று உடனடியாக தெரியவில்லை. இது தொடர்பாக வரகனேரி கிராம நிர்வாக அலுவலர் ஜெஸ்ஸி பாரதி காந்தி மார்க்கெட் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
