திருச்சியில் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை சாப்பிட்ட முதியவர் பலி!
திருச்சி சுப்பிரமணியபுரம் ஜெயில் கார்னர் கேசவா நகர்பகுதியைச் சேர்ந்தவர் அந்தோணி வயது (63). இவருக்கு இதய நோய் மற்றும் சர்க்கரை வியாதி உள்ளது.

இதற்கு மருந்து மாத்திரைகள் சாப்பிட்டு வந்தால் இந்த நிலையில் தூக்கமின்மையால் அவதிப்பட்ட அவர் தூக்க மாத்திரைகளை அதிகம் சாப்பிட்டு மயங்கி விழுந்தார்.
உறவினர்கள் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். இருந்தபோதிலும் அவர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து மகன் ஜெரால்ட் கே.கே நகர் போலீசில் புகார் செய்தார் அதன் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
