NammaTrichy
NammaTrichy - Online News Portal about Trichy Tamilnadu

BREAKING NEWS

திருச்சி சூப்பர் மார்கெட்டில் புகுந்து பணம் பறிக்க முயன்ற ரவுடிக்கு காப்பு!

0

திருச்சி சூப்பர் மார்கெட்டில் புகுந்து பணம் பறிக்க முயன்ற ரவுடிக்கு காப்பு!

திருச்சி, மேல கல்கண்டார் கோட்டை வ.உ.சி நகரை சேர்ந்தவர் சசிகுமார். இவர் திருவெறும்பூர் நவல்பட்டு சாலையில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகின்றார்.

3

இதனை தொடர்ந்து திருவெறும்பூர் செல்வபுரத்தை சேர்ந்த ரவுடி பட்டியலில் உள்ள விஷ்ணு என்கின்ற வெங்கடேசன் சூப்பர் மார்க்கெட்டிற்கு வந்து, தான் ரவுடி என்றும் தனக்கு பணம் வேண்டும் என்றும் சசிகுமாரிடம் கத்தியை காட்டி மிரட்டி உள்ளார்.

இதனால் அதிர்ந்து போன சசிகுமார் கூச்சலிட்டுள்ளார். இதனையடுத்து அந்த இடத்திலிருந்து ரவுடி விஷ்ணு தப்பி ஓடிவிட்டார்.

இதனை தொடர்ந்து சசிகுமார் அளித்த புகாரின் அடிப்படையில் திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து ரவுடி விஷ்ணுவை கைது செய்தனர்.

4
Leave A Reply

Your email address will not be published.